சட்டவிரோத மதுபான சோதனையில் பரபரப்பு: பொலிஸார் மீது 8 நாய்களை ஏவிய பெண் – இருவர் கைது!
களுத்துறை மாவட்டத்தின் கல்பாத்த பகுதியில் சட்டவிரோத மதுபான விற்பனை இடம்பெறுவதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கை எதிர்பாராத பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சோதனையின் போது பொலிஸ் அதிகாரிகள் மீது பல நாய்கள் ஏவப்பட்ட சம்பவம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
பொலிஸாருக்கு தொடர்ந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில், நீண்டகாலமாக இயங்கி வந்ததாக சந்தேகிக்கப்படும் சட்டவிரோத மதுபான விற்பனை நிலையம் ஒன்றில் விசேட சோதனை நடத்தப்பட்டது. உயரமான மதில்களால் சூழப்பட்டிருந்த அந்த வீட்டில் மதுபான விற்பனை மட்டுமின்றி, அங்கு வருவோருக்கான உணவு வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
No comments:
Post a Comment