இலங்கை தொடர்பான சமீபத்திய நிலவரங்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டின் இயற்கை வளங்களைச் செயல்படுத்துவதில் பல்வேறு தரப்புகளின் அழுத்தங்களும், சிலரின் சுயநல நோக்கங்களும் தடையாக உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். இதன் விளைவாக, நாட்டின் முன்னேற்றம் பாதிக்கப்பட்டதுடன், சில சந்தர்ப்பங்களில் வெளிநாடுகளில் தங்க வேண்டிய சூழ்நிலையும் உருவாகியுள்ளதாக தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற சந்திமா விஜய குணவர்தன எழுதிய நூல் வெளியீட்டு நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இந்த கருத்துகளை பகிர்ந்தார்.
அதே நேரத்தில், இலங்கையின் கடலோரப் பகுதிகளில் எரிவாயு மற்றும் எரிபொருள் வளங்கள் இருப்பதை நிபுணர்கள் உறுதி செய்துள்ளதாகவும், ஆனால் அவற்றை பயன்படுத்துவதில் தடைகள் நீடிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.


No comments:
Post a Comment